ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியுடன் தகாத உறவு வைத்திருந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஏட்டையாக கண்ணன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணைநடத்தி வருகிறது. இளங்கோவனின் இரண்டு உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜெயலட்சுமி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன். இந்த விவகாரத்தால் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ள அவரிடம் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணையைத் தொடங்கியது.
இளங்கோவனுடன், அவரது இரண்டு உறவினர்களும் நேற்று 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். வழக்கறிஞர் காந்தியுடன்விசாரணைக்ைகு வந்திருந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் எதுவும் பேச மறுத்து விட்டார்.
கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான சிபிஐ குழு சுமார் 3 மணி நேரம் இவரிடம் தங்களது விசாரணையை மேற்கொண்டனர். இன்றும்இளங்கோவனிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியது.
ஜெயலட்சுமிக்குத் தாலி கட்டிய இளங்கோவன் அவரை பாலியல்ரீதியில் பயன்படுத்தினார். பின்னர் அவரிடம் இருந்து தப்பியஜெயலட்சுமியை உறவினர்கள் உதவியுடன் கடத்தினார்.
இதே போல சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு கண்ணனிடம் சிபிஐ அதிகாகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலட்சுமிக்கு எடுபிடிவேலை செய்ய இன்ஸ்பெக்டர் மலைச்சாமியால் நியமிக்கப்பட்ட இந்த ஏட்டு கண்ணன் பின்னர் ஜெயலட்சுமியை மேய்ந்தார்.