For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெகஜால ஜெயிலர் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

பெண் சிறை வார்டன், நர்ஸ் மற்றும் கைதியின் மனைவி ஆகியோருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சிறைக் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய வழக்குகளின் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் ஜெயிலராக இருப்பவர் ஜெயக்குமார்.

செக்ஸ் பைத்தியமான ஜெயக்குமாருக்கு ஏற்கனவே திருப்பூரில் வசிக்கும் நர்ஸ் ஒருவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதைத் தவிர கோவை சிறையின் பெண் வார்டனாக இருக்கும் பெண்ணுடனும் தொடர்பு இருந்து வந்தது.

இது தொடர்பான புகார்களால் பல முறை அதிகாரிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார் ஜெயக்குமார்.

இந் நிலையில் சிறையில் இருக்கும் தனது கணவரைப் பார்க்க வந்த ஒரு பெண்ணுடன் ஜெயக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் கைதியான தனது கணவரை அடிக்கடி சந்திக்க அந்தப் பெண்ணுக்கு சிறப்பு அனும்தி தந்தார் ஜெயக்குமார்.

இத்தனைக்கும் 58 வயதான ஜெயக்குமார் ரிடையர் ஆக 4 மாதம் தான் மிச்சம் உள்ளது. திருமணமாகி வளர்ந்த பிள்ளைகளும் இருந்தாலும் மன்மதனிடம் பாணத்தை வாங்கி வந்து காதல் அம்புகளை விட்டுக் கொண்டே இருந்தார் ஜெயக்குமார்.

இவரது லீலைகள் குறித்து புகார்கள் குவியவே அது குறித்து விசாரணை நடத்த கோவை சரக சிறைத்துறை டிஐஜி மிஸ்ரா உத்தரவிட்டார். விசாரணையில் ஜெயக்குமாரின் கள்ளத் தொடர்புகள் உறுதியானது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவருக்குப் பதிலாக தியோடர் செல்வின் புதிய ஜெயிலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X