தஞ்சையில் ஒரே நாளில் 3 சகோதரர்கள் அடுத்தடுத்து சாவு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் ஒரே நாளில் 3 சகோதரர்கள் அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் அரிசிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மூத்த மகன் ரமேஷ் என்பவர் நேற்று காலை இறந்தார். அவரதுஇறுதிச் சடங்குகள் நேற்று மாலை நடந்தது.

இறுதிச் சடங்கு முடிவடைந்த பின்னர் ரமேஷின் தம்பிகளான சதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் இடுகாட்டுக்கு அருகே உள்ள ஆற்றுக்குச்சென்று குளிக்க முயன்றனர். படிக்கரையில் அவர்கள் கால் வைத்தபோது, படிக்கட்டுக்கள் உடைந்து இருவரும் ஆற்றில் விழுந்தனர்.

இரு சகோதரரர்களுக்கும் நீச்சல் தெரியாததால், ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்க முயன்றனர். இதில் சதீஷின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது, சுரேஷின் உடல் இதுவரைகிடைக்கவில்லை.

ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+