சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை; காங். மசோதா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்வேந்தன்எம்.பி. நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து கார்வேந்தன் கூறுகையில், தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி ஆகியமாநிலங்களை எல்லையாகக் கொண்டு சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை தொடங்க வேண்டும்.
இந்த கிளையில் 5 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தென் மாநில மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பலன்கிடைக்கும். இதை வலியுறுத்தி தனி நபர் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்துள்ளேன். விரைவில் இது விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications