பழம்பெரும் கிரிக்கெட் வீரர் விஜய் ஹசாரே மறைவு
வதோதரா:
இந்தியாவிற்கு முதல் டெஸ்ட் வெற்றியைத் தேடித் தந்த கிரிக்கெட் அணிக்குத் தலைமை வகித்த விஜய் ஹசாரே (89) காலமானார்.
நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1946ம் ஆண்டும் ஹசாரே தனது 31வது வயதில் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்தார். ஹசாரே,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு எதிராக தலா 2 சதங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதமும்அடித்துள்ளார். அத்துடன் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
1952ம் ஆண்டு இவரது தலைமையிலான இந்திய அணிதான் டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றது. இங்கிலாந்திற்கு எதிரானபோட்டியில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இவர் 30 டெஸ்டுகளில் விளையாடி, மொத்தம் 2192 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 47.65.
ஒய்வுக்குப் பின் இந்திய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இருந்தார். ஹசாரேவுக்கு மனைவி, 2 மகள், மகன் உள்ளனர். இவரதுமறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹசாரேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிட்டகாங்கில் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் பேட்டியில் இன்றுஇந்திய அணியினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர்.












Click it and Unblock the Notifications