For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள பகுதிகளில் மத்திய குழு

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மத்திய நிபுணர் குழுவினர் சுற்றுப்பயணம் செய்து வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளைபார்வையிட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் மிஸ்ரா தலைமையிலான நிபுணர் குழு நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மத்திய நீர்வளஆணையர் சைதன்யமூர்த்தி தலைமையிலான குழு கடலூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்து வெள்ளச் சேத பகுதிகளைபார்வையிட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நாகை கல்லாறு பாலத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்புவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களையும், சேதம் அடைந்த சாலைகளையும். வீடுகளையும் பார்வையிட்டனர்.

அதிகாரிகள் சென்ற இடங்களில் எல்லாம் விவசாயிகள் திரண்டு வந்து வெள்ளச் சேதங்களை எடுத்துக் கூறினர்.

நாகை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் இன்று திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வுசெய்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த மத்திய குழுவினர் குறிஞ்சிப்பாடி, பரவனாறு, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகியஇடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.

இக் குழுவினர் இன்று விருத்தாசலம், விழுப்புரம் பகுதிகளில் ஆய்வு செய்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X