பட்டாசு விபத்து: பலி 6 ஆனது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே உள்ள தாமல்வார் தெருவை சேர்ந்த சந்திரன், பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 16ம் தேதி இந்தக் கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் பலர் தீயில்சிக்கி உடல் கருகினார்கள். நாராயணன், உதயா, முருகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலத்த தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரமேஷ், முருகேசன், ராஜாமணி ஆகியோர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.அவர்களில் ரமேஷ், முருகேசன் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்.
இந் நிலையில் ராஜாமணியும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே சரியான பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் அலட்சியமாக இருந்த கடை உரிமையாளர் சந்திரனை கைது செய்ய போலீசார்முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications