தமிழக, கேரளா பேச்சு தோல்வி
சென்னை:
ஆழியார்-பரம்பிக்குளம் நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரளா அதிகாரிகளுக்கிடையே நடந்த இரண்டாம் கட்டபேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்,நிதி செயலாளர் நாராயணன், பொதுப்பணித் துறை செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோரும், கேரளா அரசின் சார்பில் தலைமைசெயலாளர் பாபு ஜேக்கப், முதன்மை செயலாளர் மாத்யூ, கேரளா மின் வாரிய தலைவர் மனோகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி பிரானேஷ், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லைஎன்றார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், அமைச்சர்கள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். அதற்கான தேதிஇன்னும் முடிவாகவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications