சுந்தரேச அய்யர் சிரித்தார்!!!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு கைது செய்யப்பட்டது குறித்து சங்கர மடத்தின் நிர்வாகி சுந்தரேஅய்யரிடம் கேட்டபோது அவர் புன்சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தார்.
ஜெயேந்திரரின் சகோதரர் விஸ்வநாதன், மருமகன் சுந்தர் ஆகியோருடன் வேலூர் சிறைக்குச் சென்று சங்கராச்சாரியாரை சந்தித்துவிட்டுத்திரும்பிய அய்யரை நிருபர்கள் சூழ்ந்தனர்.
அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் நலமாகவே உள்ளார். மடத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வழக்கு பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை என்றார்.
அப்பு கைதானது குறித்து சங்கராச்சாரியார் என்ன நினைக்கிறார் என்று நிருபர்கள் கேட்டபோது, வெறும் சிரிப்பை மட்டுமே உதிர்த்தார்அய்யர். வழக்கமாக கடுகடு முகத்துடன் இருக்கும் சுந்தரேச அய்யர் மகிழ்ச்சியுடனும் முகத்தில் சிரிப்புடனும் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications