For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்புவின் கூட்டாளி ராயபுரம் மனோ?

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

Appuசங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவுக்கும், வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்ராயபுரம் மனோவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தமிழர் குடியரசுக் கட்சித் தலைவர் தீனன் கூறியுள்ளார்.

தீனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்புவின் கூட்டாளிகள் பலர் அரசியல் போர்வையில் ஒளிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடிவருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ராயபுரம் மனோ.

வட சென்னை காங்கிரஸ் கட்சித் தலைவராகிய ராயபுரம் மனோ, அப்புவுக்கு மிகவும் நெருக்கமானவர். மனோவின் அண்ணன் செல்வராஜ்,அப்புவுடன் சேர்ந்து சந்தன மரம் கடத்துவது, செம்மரக் கட்டைகளை (ரெட் வுட்) கடத்துவதில் நீண்ட நாளாக ஈடுபட்டு வருகிறார்.

அப்புவும் மனோவும் வடசென்னையின் பல பகுதிகளில் பலரது சொத்துக்களை அபகரித்துள்ளனர், கட்டப் பஞ்சாயத்து மூலம்அடாவடியாக மிரட்டி வாங்கியுள்ளனர். ஜப்பானில் இருந்து கம்ப்யூட்டர் உதி பாகங்களை கடத்தியுள்ளார் மனோ.

அப்புவின் நிழலுலக தொழில்கள், சட்டவிரோத காரியங்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் என அனைத்து விஷயங்களும் மனோவுக்குத்தெரியும். எனவே மனோவையும், அவரது அண்ணன் செல்வராஜுவையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தீனன்.

வட சென்னையில் ரெளத்தனத்துக்கு பெயர் போனவர் இந்த ராயபுரம் மனோ என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X