ரகு தற்கொலைக்கு முயன்றாரா?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் போலீசாரின் தொடர் விசாரணைக்கு உள்ளான விஜயேந்திரரின் தம்பி ரகு தற்கொலைக்கு முயன்றதாகக்கூறப்படுகிறது.
ரகுவை முதலில் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்பி தினமும்இரவில் விசாரிக்க ஆரம்பித்தனர். பல நேரங்களில் ரகுவுக்கு மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை விழுந்தது.
கடிகாஸ்ரமம் டிரஸ்டுக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில் ரகு நடத்திய லீலைகளை ஆதாரங்களுடன் முன் வைத்த போலீசார்,உண்மைகளை மறைக்காமல் சொல்லாவிட்டால் உன்னை வேறு வழியில் கவனித்து உண்மையை வரவழைப்போம் எனவும் போலீசார்மிரட்டியதோடு ரகு மீது கையையும் வைத்துள்ளனர்.
மிரண்டு போய் பல உண்மைகளைப் போட்டு உடைத்த ரகு அதன் பின்னர் மடத்துக்குத் திரும்பினார். திடீரென மடத்தில் இருந்து காணாமல்போனார்.
அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், இதையடுத்தே மடத்துக்குச் சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், இந்ததற்கொலை முயற்சியை மறைக்கவும், போலீசாரின் முரட்டுத்தனத்தில் இருந்த அவரைக் காப்பாற்றவும், ஏற்கனவே அவருக்கு இருந்தகுடல்வால் வலியைக் காரணமாக வைத்து அப்பன்டிசைடிஸ் ஆபரேசன் செய்யப்பட்டு மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டதாகவும் இப்போது செய்திகள் கசிகின்றன.












Click it and Unblock the Notifications