For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போதையில் மனைவியை கொன்ற கணவன்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே கஞ்சா போதையில் கட்டிய மனைவியை கம்பால் அடித்துக் கொன்றார்கணவர். அப்படியும் போதை தெளியாமல் சாலையில் சென்றவர்களையும் அடித்த அந்த கொடூர மனிதரைபொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

ஈரோடு மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். பால் வியாபாரம் செய்து வருகிறார். அவரதுமனைவி ஜானகி. அருணாச்சலத்திற்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

அடிக்கடி கஞ்சா புகைத்து விட்டு மனைவியை அடித்து உதைப்பது இவரது வழக்கம். இந் நிலையில் வழக்கம்போலகஞ்சா அடித்து விட்டு வந்த அருணாச்சலம், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கோபமடைந்த ஜானகி,அருணாச்சலத்தைத் திட்டியுள்ளார்.

மனைவி திட்டியதால் வெகுண்டு எழுந்த அருணாச்சலம் வீட்டில் இருந்த மரக் கம்பை எடுத்து மனைவியைதாறுமாறாக அடித்துள்ளார். உயிர் தப்பிக்க வெளியே ஓடி வந்தார் ஜானகி. அப்படியும் விடாத அருணாச்சலம்,தெருவில் ஓடிய மனைவியை விரட்டிச் சென்று அடித்துள்ளார்.

இதில் தலையில் அடிபட்டு ஜானகி அந்த இடத்திலேயே பிணமானார். மனைவியைக் கொன்றும் வெறி தணியாதஅருணாச்சலம் தெருவில் போனவர்களையும் அடித்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் கூடி அருணாச்சலத்தைப்பிடித்து அடித்து உத்ைதனர்.

பின்னர் அவரை காங்கேயம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அருணாச்சலத்தைக் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X