ஜெயேந்திரர் கண்களில் பாதிப்பு: டாக்டர் தகவல்
வேலூர்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறைக்குள் வைத்து அவருக்குசிகிச்சை தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரை சந்தித்து விட்டு வந்த பிரபல கண் மருத்துவர் டாக்டர் பத்ரிநாத்கூறியுள்ளார்.
சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை தலைவரும், டாக்டருமான பத்ரிநாத், தனது மனைவி வசந்தியுடன் வேலூர்சிறைக்குச் சென்றார். அங்கு பத்ரிநாத்தை மட்டும் ஜெயேந்திரரை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதித்தது.
ஜெயேந்திரரை சந்தித்து விட்டு வந்த பத்ரிநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரருக்கு ரத்த அழுத்தம் உள்ளது.இதற்கான மருந்துகளை அவர் சாப்பிட்டு வருகிறார்.
ரத்த அழுத்தம் காரணமாக அவரது கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை.சிறையில் அவருக்கு பரிசோதனை செய்ய வசதி இல்லை. எனவே விடுதலை ஆனவுடன் அவருக்கு முழுமையானபரிசோதனைகள் செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications