ஜனனி டிரைவர் மீதான வழக்குக்கு தடை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள மதுரை இளம் பெண் ஜனனியின் கார் டிரைவர் சதீஷ் மீதான வழக்கை விசாரிக்க மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோர் காரில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களது கார் டிரைவர் சதீஷும்இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
3 பேரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இந் நிலையில் தன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று கோரி சதீஷ் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, சதீஷ் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.












Click it and Unblock the Notifications