முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

P.V. Narasimha Raoமுன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த 9ம் தேதி டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் ராவ். இதையடுத்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் அவரது உடல் நிலை கடந்த வாரம் கொஞ்சம்தேறியது.

அப்போது தன்னைச் சந்தித்த ஜனாதிபதி கலாம் உள்ளிட்டோருடன் ராவால் பேச முடிந்தது.

தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த ராவுக்கு இன்று பிற்பகல் 2.40 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து அவர் மரணமடைந்தார்.

இத் தகவலை அவரது உதவியாளர் சேத்தன் சர்மா தெரிவித்தார். ராவின் மரணத்தின்போது அவரது மகன் பிரபாகர் ராவ் அருகில்இருந்தார். ராவின் மரணத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.

மறைந்த ராவுக்கு 3 மகன்களும் 5 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகனான ரங்ரா ராவ் ஆந்திர மாநில அமைச்சராக உள்ளார்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ராவ், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் தந்தார். மேலும் பல சிறிய கட்சிகளை உடைத்து பதவியைக் காப்பாற்றிக் கொண்டார். இது தொடர்பானவழக்குகளில் பின்னர் சிக்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+