ஜெயேந்திரர் சொன்னார்.. கதையை முடித்தோம்: ரவி
சென்னை:
ஜெயேந்திரர் சொன்னதால் தான் கொலை செய்தோம் என போலீசாரிடம் ரவி சுப்பிரமணியம் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
நக்கீரன் நாளிதழுக்கு தனது மறைவிடத்தில் இருந்து ரவி தந்துள்ள தொலைபேசி பேட்டி:
செப்டம்பர் 1ம் தேதி சங்கராச்சாரியார் கூப்பிட்டார். அப்புவுடன் நானும் போனேன். சங்கரராமன் தொல்லை தந்து வர்றான், அவனைவிடக் கூடாது என்றார்.
இதையடுத்து இதை நாங்கள் கவனிப்பதாக சொல்லிவிட்டு சங்கரராமனின் அட்ரஸ் கேட்டோம். அப்போ சங்கரராமனே தனது சொந்தபெயரில் அனுப்பியிருந்த இறுதி எச்சரிக்கை கடிதத்தை எடுத்த சங்கராச்சாரியார், அதில் அனுப்புனர் முகவரி இருந்த பகுதியை மட்டும்கிழித்து எங்களிடம் தந்தார். அதிலேயே சங்கரராமன் வீட்டு போன் நம்பரையும் எழுதிக் கொடுத்தார்.
2ம் தேதி மறுபடியும் மடத்துக்குப் போனோம். அவர் பக்கத்தில் இருந்த பெட்டியைத் திறந்து ரூ. 10 லட்சத்தை எடுத்து எங்களிடம் தந்தார்சங்கராச்சாரியார்.
இதன் பின்னால் வெளியே வந்து கொலையை எப்படி செய்வது என்று ரிகர்சல் பார்த்தோம். 3ம் தேதி சங்கரராமனை திட்டமிட்டபடிமுட்டிச்சுட்டோம். சங்கராச்சாரியார் சொன்னதால தான் இந்தக் கொலையை செய்தோம்.
இவ்வாறு கூறியிருக்கிறான் ரவி சுப்பிரமணியம்.
ரவியின் தற்கொலைக் கடிதம்!!:
இதற்கிடையே காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது அந்த கடிதத்தை ரவி சுப்பிரமணியம் எழுதியிருப்பதாகக்கூறப்பட்டுள்ளது.
அதில்,
அப்பு சரண் அடைந்துள்ளார். சங்கரராமன் கொலை தொடர்பாக பல தகவல்களை போலீஸாரிடம் நான் தெரிவிப்பேன். இதுவரைசொகுசாக வாழ்ந்து விட்டு இனி நான் சிறையில் அடைப்பட்டு இருப்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. தற்கொலை செய்து என்உயிரை விடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்று ரவியே கூறுவது போல எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தில் இருக்கும் தபால் முத்திரை மூலம் போபாலில் இருந்து இக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
ரவி சுப்பிரமணியம் தங்கள் கஸ்டடியில் இருப்பதை இதுவரை உறுதி செய்யாமல் இருந்து வரும் போலீசார், இந்தத் தற்கொலை மிரட்டல்கடித விவரத்தை மட்டும் வெளியில் கசிய விட்டுள்ளனர். மேலும் போபாலுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதனால் ரவி விஷயத்தில் குழப்பமோ குழப்பம் நிலவுகிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications