ஜெயேந்திரர் சொன்னார்.. கதையை முடித்தோம்: ரவி
சென்னை:
ஜெயேந்திரர் சொன்னதால் தான் கொலை செய்தோம் என போலீசாரிடம் ரவி சுப்பிரமணியம் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
நக்கீரன் நாளிதழுக்கு தனது மறைவிடத்தில் இருந்து ரவி தந்துள்ள தொலைபேசி பேட்டி:
செப்டம்பர் 1ம் தேதி சங்கராச்சாரியார் கூப்பிட்டார். அப்புவுடன் நானும் போனேன். சங்கரராமன் தொல்லை தந்து வர்றான், அவனைவிடக் கூடாது என்றார்.
இதையடுத்து இதை நாங்கள் கவனிப்பதாக சொல்லிவிட்டு சங்கரராமனின் அட்ரஸ் கேட்டோம். அப்போ சங்கரராமனே தனது சொந்தபெயரில் அனுப்பியிருந்த இறுதி எச்சரிக்கை கடிதத்தை எடுத்த சங்கராச்சாரியார், அதில் அனுப்புனர் முகவரி இருந்த பகுதியை மட்டும்கிழித்து எங்களிடம் தந்தார். அதிலேயே சங்கரராமன் வீட்டு போன் நம்பரையும் எழுதிக் கொடுத்தார்.
2ம் தேதி மறுபடியும் மடத்துக்குப் போனோம். அவர் பக்கத்தில் இருந்த பெட்டியைத் திறந்து ரூ. 10 லட்சத்தை எடுத்து எங்களிடம் தந்தார்சங்கராச்சாரியார்.
இதன் பின்னால் வெளியே வந்து கொலையை எப்படி செய்வது என்று ரிகர்சல் பார்த்தோம். 3ம் தேதி சங்கரராமனை திட்டமிட்டபடிமுட்டிச்சுட்டோம். சங்கராச்சாரியார் சொன்னதால தான் இந்தக் கொலையை செய்தோம்.
இவ்வாறு கூறியிருக்கிறான் ரவி சுப்பிரமணியம்.
ரவியின் தற்கொலைக் கடிதம்!!:
இதற்கிடையே காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது அந்த கடிதத்தை ரவி சுப்பிரமணியம் எழுதியிருப்பதாகக்கூறப்பட்டுள்ளது.
அதில்,
அப்பு சரண் அடைந்துள்ளார். சங்கரராமன் கொலை தொடர்பாக பல தகவல்களை போலீஸாரிடம் நான் தெரிவிப்பேன். இதுவரைசொகுசாக வாழ்ந்து விட்டு இனி நான் சிறையில் அடைப்பட்டு இருப்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. தற்கொலை செய்து என்உயிரை விடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்று ரவியே கூறுவது போல எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தில் இருக்கும் தபால் முத்திரை மூலம் போபாலில் இருந்து இக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
ரவி சுப்பிரமணியம் தங்கள் கஸ்டடியில் இருப்பதை இதுவரை உறுதி செய்யாமல் இருந்து வரும் போலீசார், இந்தத் தற்கொலை மிரட்டல்கடித விவரத்தை மட்டும் வெளியில் கசிய விட்டுள்ளனர். மேலும் போபாலுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதனால் ரவி விஷயத்தில் குழப்பமோ குழப்பம் நிலவுகிறது.