மணல் கொள்ளை: தாசில்தார் குடும்பத்துக்கு ஜெ. உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மணல் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்ட துணைத் தாசில்தார் வெங்கடேசன் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் வெங்கடேசன் கடந்த 11ம் தேதி காஞ்சிபுரம் அருகே மணல்திருட்டை தடுக்க முயன்றபோது மணல்லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.
அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி வெங்கடேசனின்மனைவி நிர்மலாவிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் கோட்டையில் வழங்கினார்.












Click it and Unblock the Notifications