ஜெயேந்திரருடன் மாஜி அட்வகேட் ஜெனரல் சந்திப்பு
வேலூர்:
வேலூர் சிறையில் ஜெயேந்திரரை முன்னாள் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் இன்று சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சி மடத்திற்கு குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்கள், தேர்தல் ஆணையர்கள் சென்று ஆசி பெறுவது வழக்கம். ஆனால்சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட பின்பு, இதற்கு முன்பு மடத்திற்கு வந்து போனவர்கள் யாரும்ஜெயேந்திரரைப் பார்க்க சிறைக்கு வரவில்லை.
கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணாச்சலம் வேலூர் சிறைக்குச் சென்று ஜெயேந்திரரைச் சந்தித்தார். இந் நிலையில்முன்னாள் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் இன்று ஜெயேந்திரரைச் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின் வெளியே நிருபர்களிடம் பேசிய சுப்பிரமணியம், புத்தாண்டில் ஜெயேந்திரரைச் சந்தித்து ஆசிபெறுவது வழக்கம்.அதனால் இன்று வந்தேன் என்றார்.
வழக்கு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications