நாடார்கள் மீது தாக்குதலுக்கு கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நாடார் சமுதாயத்தினர் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடந்துகொண்ட முறை குறித்து திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சமீபத்தில் நாடார் பேரவையினைச் சேர்ந்தவர்கள் நடத்திய அமைதியானபோராட்டத்தின்போது போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டு, தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு எனஅராஜகத்தை கட்டவிழ்த்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினால், அவர்களை அழைத்துப் பேசி முற்றுப்புள்ளி வைக்கும்வழக்கம் இந்த அரசுக்கு எப்போதுமே கிடையாது.

திருட்டு விசிடி ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த சமீபத்தில்தெரிவித்த கருத்துக்கள் இதற்கு சரியான பதிலாக அமையும்.

விஜயகாந்த் தனது பேட்டியில், போலீஸ் உதவியுடன் சென்னை மாநகரில் திருட்டு விசிடி விற்பனை அமோகமாகநடக்கிறது. அதேபோல அரசுப் பேருந்துகளிலும் திருட்டு விசிடி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்றுகூறியுள்ளார் விஜயகாந்த். அவரது கருத்துத்தான் எனது கருத்தும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+