ஜெ. முன் தீக்குளிக்க முயற்சி
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 17வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் முன்பு அதிமுகவைச் சேர்ந்த தந்தையும் மகனும் தீக்குளிக்க முயற்சித்தனர்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 17வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்றுகாலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு முதல்வர் ஜெயலலிதா சென்று மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் நினைவு தின உறுதிமொழியை ஏற்க ஜெயலலிதா வந்தார். அப்போது மேடைக்கருகே அமர்ந்திருந்த அதிமுகவைச் சேர்ந்தஒரு தந்தையும், மகனும் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தங்கள் மீது கவிழ்த்து தீக்குளிக்க முயற்சித்தனர்.
போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் அதிமுக கொடிகளைவைத்திருந்தனர். அவர்கள் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு கட்சியின் அவைத் தலைவர் பொன்னையன், நினைவு தின உறுதிமொழியைவாசிக்க ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் திருப்பிக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழி விவரம் வருமாறு:
ஜெயலலிதாவின் புனித தலைமையில் அகிலத்தின் ஒப்பற்ற பேரியக்கமாம் அதிமுகவை கட்டிக் காப்போம். சாதி, மோதல்கள் இல்லாதசமத்துவ சமுதாயத்தை எம்ஜிஆர் வழியில் கட்டிக் காப்போம்.
நினைவாற்றலில் நெப்போலியனாய், அறிவாற்றலில் ஒளவை பெருமாட்டியாய், கனிவில் பெரியாராய், பணிவில் அண்ணாவாய்,மனிதாபிமானத்தில் எம்ஜிஆராய் விளங்கும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சிக்கு அரணாக இருப்போம்.
நாட்டின் இறையாண்மையைக் காத்து செந்தமிழ் காப்பதில் முன்நிற்கும் சிங்கத்தலைவியின் புகழ் கொடியை எங்கும் ஏந்தி இசைபாடுவோம்என்று கூறப்பட்டது. அதன் பின்னர் 2 நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேபோல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சேலத்தில் மேயர் சுரேஷ்குமார் தலைமையில்அதிமுகவினர் மெளன ஊர்வலம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications