Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரமேஷ் வழக்கு காஞ்சிக்கு மாற்றமில்லை: டிஜிபி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rameshஅண்ணா நகர் குடும்பத்துடன் மர்மமாக இறந்தது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் தனிப்படை போலீசுக்கு மாற்றப்படவில்லை என்றுடிஜிபி கோவிந்த் கூறியுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பரான அண்ணா நகர் ரமேஷ் 2002 ஜூலை 15ம் தேதி தனதுமனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதில் கூலிப்படைத் தலைவன் அப்புவுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந் நிலையில் ரமேஷ் குடும்பத்துடன் இறந்த வழக்குசங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் காஞ்சிபுரம் தனிப்படை போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. கோவிந்த் உத்தரவிட்டதாக தகவல்கள்வந்தன.

ஆனால், இதை டி.ஜி.பி. கோவிந்த் மறுத்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், ரமேஷ் வழக்கை மாற்றி உத்தரவு எதுவும்பிறப்பிக்கப்படவில்லை. அதுபோன்ற நிலை வந்தால் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

அதேபோல் தனிப்படை போலீஸ் அதிகாரிகளும், ரமேஷ் வழக்கு தங்களிடம் மாற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.

டிஜிபி இவ்வாறு கூறினாலும் அப்புவிடம் ரமேஷ் குடும்ப மரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது காஞ்சி போலீஸ் படை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+