For Daily Alerts
Just In
நீரில் மூழ்கிய அந்தமான்: ராணுவ விமானங்கள் விரைவு
போர்ட்பிளேர்:
நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ள அந்தமானுக்கு சென்னையில் இருந்து 3 ராணுவ விமானங்களில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஏ.என்- 32 ரக மிகப் பெரிய சரக்கு விமானங்கள் இந்தப் பொருட்களை ஏற்றிச் சென்றனர்.
அந்தமான், நிகோபார் தீவுகளின் 28 தீவுகளில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு மிகஅருகில் உள்ளது அந்தமான். இதனால் பாதிப்பும் மிகக் கடுமையாகவே உள்ளது.
குறைந்தது 20 பேர் பலியானார்கள் என்றும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சேதத்தால் வெளியுலகத்துடனான அந்தமானின் தகவல் தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. காணாமல் போனவர்களின்எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Comments
Story first published: Sunday, December 26, 2004, 5:30 [IST]