For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலுக்குள் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கதி என்ன?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Seaசென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மீனவர்கள் தான் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களின் கதி என்னவானது என்று தெரியவில்லை.

கரையில் குப்பங்களில் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த ஆயிரக்கணக்கான குடிசைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதில்நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் ஏராளமான மீனவர் குடியிருப்புகள், குடிசைகள் உள்ளன. இன்றுகாலை எழுந்த ராட்சத அலைகளில் இந்த குடிசைகள் ஆயிரக்கணக்கில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன.

சென்னையில் நொச்சிக்குப்பம், குயில் குப்பம், அயோத்தியா குப்பம் என பல்வேறு மீனவர் குடியிருப்புகளில் கடல் நீர் புகுந்து விட்டது.அதே போல நாகப்பட்டிணம், பூம்புகார், பொறையார் ஆகிய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடிசைகளுக்குள் நீர்புகுந்துள்ளது.

அதிகாலை காலை நேரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால், தூக்கத்திலேயே பல மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடல் நீரில்மூழ்கியுள்ளனர்.

100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று சென்னை மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் கூறப்படுகிறது. இதேபோல, புதுவை,காரைக்கால் பகுதிகளிலும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X