மத்திய அரசு உதவி: ஜெவிடம் பிரதமர் உறுதி
டெல்லி:
நில நடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றுபிரதமர் மன்மோகன் சிங் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை மன்மோகன் சிங்வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநில முதல்வர்களுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார். தமிழகமுதல்வர் ஜெயலலிதாவுடன் பேசிய மன்மோகன் சிங், தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கைஅதிகமாக இருப்பதாகவும் ஜெயலலிதா பிரதமரிடம் தெரிவித்தார்.
மேலும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வீடிழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு வைக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார். அதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிகாக்க வேண்டும் என்றும் பொதுமக்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விடுமாறு மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன்ஆகியோரை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
சேதம் குறித்து முழுத் தகவல்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 2 மணிக்குச்செல்லவிருப்பதாகவும் மணிசங்கர் அய்யர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சோம்நாத் சாட்டர்ஜி இரங்கல்:
கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைவதாக மக்களவை சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications