குழந்தையுடன் பெண் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கணவருடன் ஏற்பட்ட வாய்த் தகராறில் கோபமுற்ற பெண், தனது 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி சத்யா. வீரமணி டிரைவராக வேலை பார்க்கிறார். செலவுக்கு பணம்கொடுக்குமாறு கணவரிடம் பணம் கேட்டுள்ளார் மனைவி சத்யா. ஆனால் அடிக்கடி பணம் கேட்காதே என்று கூறி திட்டியுள்ளார் வீரமணி.
இதனால் கோபமடைந்த சத்யா, தனது 6 மாத கைக்குழந்தையான பாஸ்கருடன் தீக்குளித்தார். இதில் இருவரும் கருகினர். உடனடியாககீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்கு அவர்களை வீரமணி உள்ளிட்டோர் கொண்டு சென்றனர். இருப்பினும் இருவரும் ஏற்கனவேஇறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications