வாசனிடம் உதவி கேட்ட வீரப்பனின் தம்பி மனைவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாழ்க்கை நடத்த உதவி செய்யுமாறு கோரி சந்தனக் கடத்தல் வீரப்பனின் தம்பி அர்ஜூனனின் மனைவிதங்கம்மாள், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடம் மனு கொடுத்தார்.
சுட்டுக் கொல்லப்பட் வீரப்பனின் தம்பி அர்ஜூனனின் மனைவி தங்கம்மாள். இவர் சென்னையில் உள்ள தமிழககாங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தனது மகன், மகளுடன் வந்தார்.
அங்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து தனது மகன், மகள் படிப்புக்கும், தனது வாழ்க்கைக்கும்காங்கிரஸ் கட்சி சார்பில் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து மனு ஒன்றையும் கொடுத்தார். அதுகுறித்துபரிசீலித்து முடிவு செய்வதாக வாசன் தங்கம்மாளிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications