ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து
சென்னை:
![]() |
சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கடலோரங்களில் உள்ள கிளப்கள், சார்ட்கள் ஆகியவற்றில் இந்த ஆண்டுபுத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கடல் கொந்தளிப்பினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் தங்களால் ஆன உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந் நிலையில் வருகிற டிசம்பர் 31ம் தேதி வழக்கமாக கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள்இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை நகர் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் புத்தாண்டுக்கொண்டாட்டங்கள் அதிக அளவில் இடம் பெறும்.
இம்முறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு தமிழகமே சோகக் கடலில் மூழ்கியுள்ளதால் சென்னை நகரில் உள்ள முக்கிய நட்சத்திரஹோட்டல்கள் அனைத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் கொந்தளிப்புக்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரமாண்டமான கருப்புத் துணியால் ஆனபேனர்கள் ஹோட்டல்கள் முன்பு தொங்க விடப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னை புறநகரான கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்து கிளப்கள், ரிசார்ட்கள் ஆகியவற்றிலும்புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications