விடுதலைப் புலிகளுக்கு கடும் உயிர் சேதம்: சந்திரிகா
கொழும்பு:
![]() |
சுனாமியால் வட கிழக்குப் பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தமிழர் பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல்போக்கு காட்டி வருகிறது இலங்கை அரசு. இதையடுத்து மீட்புப் பணிகளில் புலிகள் தான் முழு அளவில் இறங்கியுள்ளனர்.
இலங்கைக்கு வரும் நிதியுதவி அரசிடம் வழங்கப்படுவதால் அது தமிழர் பகுதி மீட்புப் பணிகளுக்கு உபயோகமாக இல்லை. இதனால் இந்தநிதியை அரசும், புலிகளும் இணைந்து பயன்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் வலுத்து வருகிறது.
மேலும் வட கிழக்குப் பகுதியில் புலிகளாலும், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சுற்றி ராணுவமும் புதைத்து வைத்துள்ள லட்சணக்கானகண்ணி வெடிகளும் அலையால் அடித்துச் செல்லப்பட்டு பல பகுதிகளிலும் புதைந்துள்ளன.
இதனால் மீட்புப் பணிக்கு வரவும் பல நாட்டினர் அஞ்சுகின்றனர். தப்பித் தவறி கண்ணி வெடியில் சிக்கிக் கொள்ள நேரலாம் என்றஅச்சத்தில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
இந் நிலையில் மீட்புப் பணிகளுக்கு நிதியுதவியும் நிவாரண உதவிகளையும் செய்யுமாறு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கிழக்குப் பகுதியில் சில இடங்களைப் பார்வையிட்ட பின் அதிபர் சந்திரிகா நிருபர்களிடம் கூறியதாவது:
சுனாமி கடல் அலையால் விடுதலைப் புலிகளுக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. வட கிழக்கில் இருந்த புலிகளின் பெரும்பாலானகடற்படை முகாம்களும் அழிந்துவிட்டன. அங்கு பெரும் உயிர்ச் சேதத்தையும் புலிகள் சந்தித்துள்ளனர்.
இதே போல ராணுவத்துக்கும் அதிகமான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. ராணுவ வாகனங்கள், ஆயுதங்களை இழந்துள்ளோம். சுமார் 10லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,673 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 5,000 பேரைக் காணவில்லை என்றார்.
ராணுவத்திற்கு ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.













Click it and Unblock the Notifications