கபில் சிபலை கண்டித்த சோனியா
டெல்லி:
கடல் கொந்தளிப்பு குறித்து இந்தோனேஷியா தகவல் தெரிவித்தும் அலட்சியமாக இருந்துவிட்டதாக மத்திய அறிவியல் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அவர்விளக்கமளித்தார்.
இந்தோனேஷியா கடல் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் உருவானதைஇந்தோனேஷிய கடலராய்ச்சித் துறை அதிகாரிகள் கபில் சிபிலிடம் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது குறித்து கபில் சிபல் அலட்சியமாக இருந்துவிட்டார். எனவே அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உள்துறை அமைச்சகத்துக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லைஎன்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் கபில் சிபலுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டார்.இதனையடுத்து சிவராஜ் பாட்டீல் சோனியாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தார்.
கபில் சிபல் சோனியா காந்தியின் வீட்டுக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். இருப்பினும் கபில் சிபலை சோனியா மிகக் கடுமையாகக்கண்டித்ததாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் கபில் சிபலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாஜக பிரச்சினை கிளப்புவதை காங்கிரஸ் வட்டாரங்கள்குறை கூறியுள்ளன. இதை பாஜக அரசியல் ஆக்க முயல்வதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
கபில் சிபல் அலட்சியமாக இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டால் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.