For Daily Alerts
Just In
ஜெவிடம் இன்று ஒரே நாளில் குவிந்த ரூ. 13 கோடி!
சென்னை:
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் இன்று ஒரே நாளில் ரூ. 12.92 கோடிவழங்கப்பட்டது.
ஜெயலலிதாவை ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குநர் சங் இன்று கோட்டையில் சந்தித்து சுனாமி நிதிக்கு ரூ. 2கோடி வழங்கினார். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி ரூ. 1 கோடி நிதியை வழங்கினார்.
தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பாலகுருசாமி ஆகியோர் தலா ரூ. 25லட்சம் வழங்கினர்.
தமிழக அதிரடிப்படை சார்பில் அதன் தலைவர் விஜயக்குமார் ரூ. 11.56லட்சம், கோவை மாநகராட்சி சார்பில்அதன் மேயர் மலரவன் ரூ. 11.57 லட்சம் வழங்கினர்.
நடிகர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து ரூ. 10 லட்சம் வழங்கினார்.
இதுதவிர ஹரியானா மாநில அரசின் சார்பில் அதன் நிதியமைச்சர் சம்பத் சிங் ரூ. 3 கோடிக்கான காசோலையைமுதல்வரிடம் வழங்கினார். இன்று மட்டும் மொத்தம் ரூ.
12.92 கோடி நிதி ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.
Comments
chennai tamil nadu jayalalitha pm news relief assistance nagapattinam relief fund victims tremor rocks tsunami disaster
Story first published: Monday, January 3, 2005, 5:30 [IST]