நிவாரண நிதி திரட்ட கால்பந்து போட்டிகள்: சுனில்தத்
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கால்பந்துப் போட்டிகள் நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் சுனில்தத் கூறியுள்ளார்.
சென்னை வந்த சுனில்தத் சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். பட்டினப்பாக்கம், ஓடைமாநகர், பெசன்ட் நகர், சீனிவாசபுரம்ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களையும் பார்த்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கால்பந்துப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கிடைக்கும்பணம் சுனாமி நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்றார் சுனில்தத்.
இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்னான்டிக் குப்பத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர்அவர்களுக்கு நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் அரிசி, பருப்பு, பிளாஸ்டிக் குடம், வாளி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
அவரிடம் பொம்மலாட்டக் கலைஞர்கள் செல்வராஜ்- சாந்தி தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ளபொம்மைகள் கடல்நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக முறையிட்டனர். வங்கி மூலம் அவர்களுக்குக் கடன் பெற்றுத் தருவதாக சுனில் தத்உறுதியளித்தார்.
பின்பு மருத்துவ முகாம்கள் மற்றும் பல நிவாரண உதவி வழங்கப்படுவதைப் பார்வையிட்டார். காஞ்சிபுரம் மாவட்ட திட்ட அதிகாரிவேலுசாமியிடம் சுனாமி அலையின் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதனையடுத்து நிருபர்களிடம் பேசிய சுனில் தத் கூறியதாவது:
நான் பார்த்த இடங்களில் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் முன்பாக தங்களது வேதனையைச் சொல்லி அழுகிறார்கள். அவ்வாறுஅழுவது குழந்தைகளின் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உணவு, துணிகள் வழங்கினால் மட்டும் போதாது. அவர்கள் மீண்டும் தங்களது வாழ்வைப் பெறவேகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ தயாராக இருக்கிறது என்றார்.
பின்னர் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு சென்றார்.













Click it and Unblock the Notifications