நில அதிர்வால் விரிசல்: அரசு மருத்துவமனை இடிப்பு!
சென்னை:
நில நடுக்கம் காரணமாக விரிசல் ஏற்பட்டதையடுத்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பெண்கள்பிரிவு இன்று இடிக்கப்பட்டது.
அத்தோடு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்களை எழுப்பவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 26ம் தேதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3 முறை நில அதிர்வுகள்ஏற்பட்டுவிட்டன.
இதில் ஸ்டான்லி மருத்துவமனையின் பெண்கள் பிரிவில் உள்ள கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து வார்டில் இருந்த பெண்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அந்த வார்டு மூடப்பட்டு, யாரும்உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந் நிலையில் விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை மருத்துவமனை டீன் டாக்டர் குணசேகரன், பொதுப்பணித்துறைதலைமைப் பொறியாளர் ஜெயச்சந்திர மோகன் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அதை இடித்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக்கட்டடத்தை இடிக்கும் பணி இன்றே தொடங்கியது.
இது குறித்துடாக்டர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்கள் பிரிவின் பழைய கட்டடம் 1969ம்ஆண்டில் கட்டப்பட்டது. இதன் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டது. இப்போது இதில் தான் விரிசல்ஏற்பட்டுள்ளது.
இதனால் அதை இடித்து விட முடிவு செய்தோம். கட்டடத்தை இடிப்பதால் மருத்துவமனையில் நோயாளிகளுக்குஎந்த பாதிப்பும் ஏற்படாது.
இத்தோடு ஸ்டேன்லி மருத்துவமனையில் உள்ள பிற பழைய கட்டடங்களையும் இடித்து விட்டு புதிய கட்டடங்கள்கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 24 கோடி நிதி கோரியுள்ளோம்.
இந்த நிதி கிடைத்தவுடன் புதிதாக 10 மாடிக் கட்டடம் எழுப்பப்படும். புதிய கட்டடத்தில், அனைத்து நவீனமருத்துவ பிரிவுகளும் அமைக்கப்படும். நவீன மருத்துவக் கருவிகளும் நிறுவப்படும்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக ரூ. 4 கோடி செலவில் 2 அடுக்குகள் கொண்ட விடுதியும்கட்டப்படும் என்றார்.