For Daily Alerts
Just In
3 பச்சிளம் சிசுக்களின் சடலங்கள் மீட்பு
நாகர்கோயில்:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சுனாமி அலைகளுக்குப் பலியான 3 பச்சிளம் சிசுக்களின் உடல்கள் அழுகிய நிலையில் 10நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.
குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு என்ற இடத்தில் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தபோது 3 சிசுக்களின் அழுகிய உடல்களைக்கண்டெடுத்தனர்.
அதில் 2 குழந்தைகள் பிறந்து 6 மாதமே ஆனவையாகும். இன்னொரு குழந்தை பிறந்து 10 மாதமே ஆகிறது. 3 குழந்தைகளின் உடல்களும்முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டன.
இதற்கிடையே, சுனாமியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவதாசன்(வயது 70) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Comments
chennai tamil nadu jayalalitha news relief assistance relief fund victims tremor dinakaran rocks hc judge
Story first published: Thursday, January 6, 2005, 5:30 [IST]