3 பச்சிளம் சிசுக்களின் சடலங்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோயில்:
![]() |
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சுனாமி அலைகளுக்குப் பலியான 3 பச்சிளம் சிசுக்களின் உடல்கள் அழுகிய நிலையில் 10நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.
குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு என்ற இடத்தில் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தபோது 3 சிசுக்களின் அழுகிய உடல்களைக்கண்டெடுத்தனர்.
அதில் 2 குழந்தைகள் பிறந்து 6 மாதமே ஆனவையாகும். இன்னொரு குழந்தை பிறந்து 10 மாதமே ஆகிறது. 3 குழந்தைகளின் உடல்களும்முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டன.
இதற்கிடையே, சுனாமியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவதாசன்(வயது 70) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.













Click it and Unblock the Notifications