For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுந்தரேச அய்யர் காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Sundaresa Ayyar சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரின் சிறைக் காவல் வருகிற 20ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்பட இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சங்கர மட மேலாளர்சுந்தரேச அய்யரும் ஒருவர். இவர் டிசம்பர் 25ம் தேதி கைது செய்யப்பட்டார்.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அய்யரின் சிறைக் காவல் இன்றுடன் டிவடைகிறது. இதைத் தொடர்ந்து அவர் காஞ்சிபுரம்முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது சிறைக் காவலை வருகிற 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் சென்னைசிறையில் அடைக்கப்பட்டார்.

கணக்காளர் ஜாமீன் மனு:

இதற்கிடையே கைது செய்யப்பட்ட சங்கர மடத்தின் கணக்காளர் விஸ்வநாத அய்யரின் சார்பில் இரு ஜாமீன் மனுக்கள் இன்று தாக்கல்செய்யப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மடத்தின் கணக்குகளைத் திருத்தியதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X