சுனாமி: ஜேசுதாஸின் சர்வ மத பிரார்த்தனை நிகழ்ச்சி
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில்சர்வ மத பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்டு ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும், சுனாமியால்பாதிக்கப்பட்டு மன உளைச்சில் சிக்கி அவதிப்படுவோரின் மனதுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சர்வ மத பிரார்த்தனைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளிலும் சென்னையில் இந் நிகழ்ச்சி நடைபெறும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருதினங்களிலும் இடைவிடாது பிரார்த்தனை மேற்கொள்ளப்படும்.
இதற்காக கேரளாவிலிருந்து 5 நம்பூதிரிககளும் வருகிறார்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிம்மதி, புத்துணர்வுடன் கூடியஎதிர்கால வாழ்க்கைக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.