மகா பெரியவரின் 5 சீடர்களிடம் விசாரணை
காஞ்சிபுரம்:
மகா பெரியவர் என்று அழைக்கப்படும் மறைந்த காஞ்சிப் பெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீவிர சீடர்கள் 5 பேரிடம்காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கையும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரே விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இன்று5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இவர்கள் 5 பேரும் காஞ்சி மகாப் பெரியவன் தீவிர சீடர்கள் ஆவர். மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த சந்திரன்,நாதன் மற்றும் அவரது மனைவி, கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இந்த ஐந்து பேரும் இன்று காலை காட்டுப் பங்களாவில் வைத்துவிசாரிக்கப்பட்டனர்.
அவர்களிடம், ஆடிட்டர் ராதாகிருஷ்ணனுக்கும் சங்கர மடத்துக்கும் இடையேயான தொடர்பு, ஜெயேந்திரருக்கும், ராதாகிருஷ்ணனுக்கும்இடையிலான மோதல் குறித்து போலீஸார் கேள்விகள் கேட்டனர்.
இவர்களில் சந்திரனைத் தவிர மற்ற நான்கு பேரும் விசாரணை முடிந்து பிற்பகல் 12.45 மணியளவில் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர்.சந்திரனிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications