பொங்கலுக்கு தயாராகும் தமிழகம்
சென்னை:
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலையொட்டி பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாரிப்பு மும்முரமாக நடந்துவருகிறது.
பொங்கல் திருநாள் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
சுனாமி சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் இயற்கையை வணங்கும் திருநாளான பொங்கலுக்காக சுனாமி பாதிப்பு நடக்காத தமிழக பகுதிகள்தயாராகி வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக அளவில் பொங்கல் பானைகள், அடுப்புக் தயாரிக்கப்படுகின்றன. பொங்கலுக்கு இன்னும் சிலநாட்களே உள்ளதால், பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
இதேபோல, மஞ்சள் அதிகம் உற்பத்தியாகும் ஈரோடு மாவட்டத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மஞ்சள் அனுப்புவதுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு மஞ்சள் மகசூல் அமோகமாக இருந்தது. ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 3,000 வரை விலை போவதாக விவசாயிகள் மகிழ்ச்சிதெரிவிக்கின்றனர்.