சுனாமி பாதித்த பகுதிகளுக்கு கூடுதல் மண்ணெண்ணை!
நாகர்கோவில்:
![]() |
கடலோரப் பகுதிகளில் வடிக்கும் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக 2 செட் வேட்டி, சேலை, போர்வை, 60கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியது.
மேலும் குடும்பத்துக்கு ரூ. 4,000 ரொக்கமும் வழங்கப்பட்டது.
இந் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதலாக குடும்பத்துக்கு 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தமிழகத்துக்கு கூடுதலாக 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்க வேண்டும் என பிரதமர்மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா வைத்த கோரிக்கையை மத்திய அரசு உடனே ஏற்றுக் கொண்டுவிட்டது.
தமிழகத்திற்குக் கூடுதலாக 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணை அனுப்பப்பட்டுவிட்டது. இந்தக் கூடுதல்மண்ணெண்ணை தற்போது சுனாமி பாதித்த கடலோரப் பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு இந்த மண்ணெண்ணையை லிட்டர் ரூ. 8.60க்கு வினியோகிக்கிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர்மண்ணெண்ணெயின் விலை ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications