அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்து ஏராளமான நகை, பணத்தையும் கொள்ளைக் கும்பல்திருடிச் சென்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதி உறுப்பினர் கே.சுதர்சனம். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். முன்புபிற்பட்டோர் நிலத்துறை அமைச்சராக சிறிது காலம் இருந்தவர்.

சுதர்சனத்தின் வீடு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 2.45 மணிக்கு 6 பேர் கொண்டகும்பல் வந்துள்ளது. வீட்டின் கதவை உடைத்து அவர்கள் உள்ளே புகுந்தனர். அப்போது சப்தம் கேட்டு எழுந்த சுதர்சனத்தின்மகன் சதீஷ் அங்கு வந்தார். கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை கட்டையால் அடித்து தாக்கி அறை ஒன்றில் வைத்துப்பூட்டினர்.

வீட்டின் கீழ் பகுதியில் சப்தம் கேட்டதால் எழுந்து கீழே வந்த சுதர்சனம், கொள்ளையர்களைப் பார்த்ததும் சப்தம் போட்டுள்ளார்.இதையடுத்து அந்தக் கும்பல் சுதர்சனத்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சுதர்சனம் சுருண்டுவிழுந்து பிணமானார்.

இதைத் தொடர்ந்து கொள்ளைக் கும்பல் வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேவந்தனர். சுதர்சனம் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளைர்கள் புகுந்தது தெரிந்ததும் ஊர் மக்கள் ஏராளமான பேர் அங்கே கூடினர்.ஆனால் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வெளியே வந்த திருடர்கள் பின்னர் அங்கிருந்து தப்பினர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் காவல்துறை ஐ.ஜி. ஜாங்கிட் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கொலை மற்றும்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இந்தியில் பேசியதாக ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவர்கள் வட இந்தியாவைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுட்டு பிடிக்க ஜெ. உத்தரவு:

இந் நிலையில் சுதர்சனம் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். கொலை மற்றும்கொள்ளையில் ஈடுபட்டவர்களை சுட்டுப் பிடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் அடிமட்ட அளவிலிருந்து உயர் பதவிக்கு உயர்ந்தவர்சுதர்சனம். கட்சியின் மீதும், கட்சித் தலைமை மீதும் அவருக்குள்ள விசுவாசம், பாசம், நம்பிக்கை மிகவும் சிறப்பானது.

கட்சிக் கட்டுப்பாட்டை மதித்து, கட்சியின் திட்டங்களை தொய்வின்றியும், அயராதும் நிறைவேற்றப் பாடுபட்டவர் சுதர்சனம்.மக்களுக்காக மிகவும் சிறப்பான முறையில் கடமையாற்றி வந்தவர். சுதர்சனத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்குஎனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதர்சனத்தை சுட்டுக் கொன்று, கொள்ளையில் ஈடுபட்டவர்களை சுட்டுப் பிடிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+