ஜெயேந்திரர் ஜாமீன்: நாளை தீர்ப்பு
டெல்லி & காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் நாளைதீர்ப்பு வழங்குகிறது.
சங்கர்ராமன் கொலை வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி ஜெயேந்திரர் இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னைஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோத்தி, நீதிபதி மாத்தூர், நீதிபதி நோயெல்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்விசாரித்தது. ஜெயேந்திரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் நரிமனும், தமிழக அரசு தரப்பில் கே.டி.எஸ்.துல்சியும் ஆஜராகினர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம்தள்ளிவைத்தது. இந் நிலையில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வெளியிடப்படுகிறது.
மகா பெரியவரின் உதவியாளரிடம் விசாரணை
இந் நிலையில் மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாளராக இருந்த வைத்தியநாதன்என்பவரிடம் இன்று காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காஞ்சிப் பெரியவரின்முன்னாள் சீடர்களான ஐந்து பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
இந் நலையில் இன்று பெரியவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய வைத்தியநாதன் என்பவரிடம் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications