வங்கி ஊழியர்களின் நூதன போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

வாராக் கடனை வசூலிக்க கோவை இந்தியன் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தை நடத்தினர்.

கோவை இந்தியன் வங்கி சார்பில் வாராக் கடன் வசூல் முகாம் நடத்தப்பட்டது. நீண்ட காலமாக

கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களிடம் கடனை வசூலிக்க நூதன முயற்சியை மேற்கொள்ள வங்கி நிர்வாகம் முடிவுசெய்தது.

அதன்படி கடன் தொகையை வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டு முன்பு கோஷமிட்டுஆர்ப்பாட்டம் நடத்த முடிவானது.

இதைத் தொடர்ந்து கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வரும் ஒருவர் வாங்கிய ரூ. 40 லட்சம் கடன் தொகையைதிருப்பிச் செலுத்தக் கோரி அவரது வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வங்கி ஊழியர்கள் அடங்கிய குழு கிளம்பியது.

கடன் வாங்கியவரின் வீட்டை அடைந்த வங்கிக் குழு அங்கு கூடி கடனை திருப்பிச் செலுத்தக் கோரி கோஷமிடத் தொடங்கினர்.இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். கடன் வாங்கியவரும் என்ன என்று வெளியே வந்து பார்த்துஅதிர்ச்சி அடைந்தார்.

லட்சக்கணக்கில் பணம் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்துவதில் அலட்சியம் காட்டுவது நியாயமா? மக்கள் சேமிப்புப் பணத்தைகடனாகப் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்பதா என்று கூறி வங்கி ஊழியர்கள் கோஷமிட்டனர்.

இதையடுத்து வங்கி ஊழியர்களுக்கும், கடன் வாங்கியவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துகடனை விரைவில் திருப்பிச் செலுத்துமாறு அறிவுரை கூறி விட்டு வங்கி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+