சென்னையில் இன்று நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Marina beach

தமிழக மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் இன்றோ நாளையோ லேசான நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றுசென்னைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் அமைப்பு சார்பில் ஒரு குழு நில அதிர்வு குறித்து ஆராய்சியில் ஈடுபட்டு வருகிறது.இக்குழுவில் டாக்டர் கே.கே.சர்மா, டாக்டர் ராஜேஸ்வர ராவ், டாக்டர் பெரியகாளை ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையோரங்களில் இன்று மாலை ஆறு மணியில் இருந்து நாளை காலை ஆறுமணிவரை ஏதேனும் ஒரு நேரத்தில் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நில அதிர்வு 4.5 ரிக்டர் அளவில் இருக்கும்.

இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர முடியாது என்று கூறினர்.

இதற்கிடையே இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு, இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில்கடந்த 10 நாட்களாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அதன் தாக்கம் இந்தியாவின் சில பகுதிகளில் அவ்வப்போதுஉணரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அவ்வப்போது நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது. இருப்பினும்இவற்றால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே பொதுமக்கள் பீதியடைத் தேவையில்லை என்று கூறியது.

மும்பை, ஒரிசாவில் சுனாமி வாய்ப்பு:

இந் நிலையில் மும்பை மற்றும் ஒரிசாவின் கடலோரப் பகுதிகளில் வருங்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் சுனாமிஅலைகள் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக மும்பை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+