12ம் தேதி துக்க தினமாக அனுசரிப்பு: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமி அலைகளுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதும் துக்கதினமாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: கடந்த டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலைத் தாக்குதலில் 8,000க்கும் மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று எனது தலைமையில்நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வருகிற 12ம் தேதி தமிழக அரசின் சார்பில் துக்க தினமாக அனுசரிக்கப்படும். அன்றைய தினம் காலை 10.30மணியளவில் எனது தலைமையில் அமைச்சரவை கூடி 2 நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கும்.
அதேபோல, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படும். இதேபோலதனியார் நிறுவனங்களிலும் மேற்கொள்ளுமாறு அரசு கோரிக்கை விடுக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.













Click it and Unblock the Notifications