For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதரவற்ற குழந்தைகளுக்கு காளிமுத்து ஆறுதல்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

Childrens lost parents to tsunami in TN

சுனாமியால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு நாகர்கோவில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளைசபாநாயகர் காளிமுத்து பார்த்து ஆறுதல் கூறினார்.

சுனாமியால் ஆதரவற்றவர்களாகி விட்ட குழந்தைகள் அரசு அமைத்துள்ள காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில்,கடலூர், நாகை ஆகிய இடங்களில் இந்த காப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் காப்பகத்திற்கு இன்று சபாநாயகர் காளிமுத்து வருகை தந்தார். குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறிய அவர்,அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களாகி விட்ட குழந்தைகளுக்காகவிரைவில் சேவை முகாம் ஒன்று தொடங்கப்படும் என்றார். காளிமுத்துவுடன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரமும்வந்திருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X