For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவை கிராமங்களை தத்தெடுக்கும் மகாராஷ்டிர அரசு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

The scene in Pondy port port

பாண்டிச்சேரி மாநிலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள சில கிராமங்களை மகாராஷ்டிரா அரசு தத்தெடுத்து வீடுகள் கட்டித்தரும் என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறினார்.

பாண்டிச்சேரியில் சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளை விலாஸ்ராவ் தேஷ்முக் பார்வையிட்டார். புதுவை முதல்வர் ரங்கசாமி,மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி ஆகியோர் அவருடன் சென்றனர். அப்போது நிருபர்களிடம் பேசிய தேஷ்முக்கூறியதாவது:

புதுவையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மகாராஷ்டிர அரசின் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த குழு தரும்அறிக்கையின் அடிப்படையில் எந்தெந்த இடங்களில், எந்த மாதிரியான வீடுகள் கட்ட வேண்டும் என்பது குறித்து திட்டம்வகுக்கப்படும்.

மகாராஷ்டிராவின் லத்தூர் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டபோது, நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் எங்களுக்குஉள்ளது. குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டபோதும், ஒரிசா கடும் புயலால் பாதிக்கப்பட்டபோதும் சில கிராமங்களைதத்தெடுத்து வீடுகள் கட்டித் தந்துள்ளோம்.

அதேபோல் புதுவைக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வோம். மும்பை காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுவைமீனவர்களுக்கு வழங்குவதற்காக வலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

புதுவை மாநிலத்தில் நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X