புதுவைக்கு விஜயகாந்த் ரூ. 3 லட்சம் நன்கொடை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ. 3 லட்சம் நிதியை அம்மாநில முதல்வர்ரங்கசாமியிடம் நடிகர் விஜயகாந்த் வழங்கினார்.
புதுவைக்கு இன்று வந்த விஜயகாந்த் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார். அவருடன் விஜயகாந்த்ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் ராமு வசந்தன், மாநில செயலாளர் ஜெயக்குமார் மற்றும் புதுவை மாநில விஜயகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் வி.பி.பி.வேலு உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், கடந்த 27ம் தேதி புதுவைக்குட்பட்ட புதுக்குப்பம் பகுதியைப்பார்வையிட்டேன். தமிழகத்தில் சுனாமி பாதிப்பு நிவாரண நதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்தேன். தற்போது புதுவைக்கு ரூ. 3லட்சம் கொடுத்துள்ளேன்.
இலங்கைக்கு ரூ. 6 லட்சம் கொடுத்துள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நடிகர்களும் உதவிவருகின்றனர். நடிகர், நடிகையரின் கலை நிகழ்ச்சி நடத்தப்படுமா என்பதை நான் மட்டும் முடிவு செய்ய முடியாது.அனைவரையும் கலந்து பேசி முடிவு செய்வோம்.
இந்தி நடிகர் விவேக் ஓபராய் தேவானம்பட்டினம் கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நமது நடிகர்கள் ஒருகிராமத்தைத் தத்தெடுத்தால் மற்ற கிராமத்தினர் அதை விரும்புவார்கள் என்று கூற முடியாது என்றார் விஜயகாந்த்.