விவேக் ஓபராய் தலைமையில் கடலூரில் பிரார்த்தனை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

Vivek Oberai in Cudallore district
சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக கடலூர் கடற்கரையில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் தலைமையில் இன்று கூட்டுப் பிரார்த்தனைநடைபெற்றது.

சுனாமியால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்து இன்றுடன் 16 நாட்கள் ஆகிறது. இதையடுத்து கடலூர் கடற்கரையில் இன்று காலைபிரமாண்டமான கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் முகாமிட்டிருக்கும் இந்தி நடிகர் விவேக் ஓபராய் இதற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டுப்பிரார்த்தனையில் விவேக் ஓபராய், அவரது பெற்றோர் சுரேஷ் ஓபராய், யசோதா, ஆன்மீக குரு சித்தானந்த சரஸ்வதி உட்படநூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக நடத்தப்பட்ட இந்த கூட்டுப் பிரார்த்தனையின்போது சிறப்பு யாகமும் நடைபெற்றது.

பின்னர் கடல் அன்னையை வணங்கி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. கடல் நீரில் மலர்களைத் தூவி, இதுபோன்ற சோகத்தைமீண்டும் ஏற்படுத்தாதே கடல் அன்னையே என்று கூறி அனைவரும் கண்ணீர் மல்க வேண்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+