தமிழக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை: அத்வானி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Vijayendrarஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல்தான் தமிழக அரசு விஜயேந்திரரைக் கைது செய்துள்ளதுஎன்று பாஜக தலைவர் எல்.கே.அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக தலைவர்கள் குழு சென்று சந்தித்தது.இந்தக் குழுவில் அத்வானி, ஜஸ்வந்த் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த அத்வானி செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயேந்திரரைக் கைது செய்துள்ளதன்மூலம் கடந்த 2,500 ஆண்டுகளாக தங்கு தடையின்றி நடந்து வரும் பூஜைகள், வழக்கமான பணிகள் அனைத்தும் தடைபட்டுப்போகும் என்பதை பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்.

இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு இந்துக்களின் உணர்வுகளை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்குபிரதமர், இந்துக்களின் மனம் புண்படாத வகையில், இந்தப் பிரச்சினையைக் கையாளுமாறு தமிழக அரசுக்கு நான்கு நாட்களுக்குமுன்புதான் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன் என்றார்.

ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை விரும்பாத தமிழக அரசு அதற்குப் பழி தீர்க்கும் வகையிலேயேவிஜயேந்திரரைக் கைது செய்துள்ளதாக உணர்கிறோம் என்றார் அத்வானி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+