டிஜிபி கோவிந்த் அதிரடி மாற்றம்: புதிய டிஜிபி அலெக்சாண்டர்
சென்னை:
தமிழக டிஜிபியாக இருந்த கோவிந்த் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக உளவுத் துறை டிஜிபியாக வந்த ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவிந்த்துக்கு டப்பா பதவியான போலீஸ் வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.
இதுவரை இந்தப் பதவியில் இருந்த நெயில்வால், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு டிஜிபி பதவியையும் அவர்கூடுதலாக கவனித்து வருவார். இவரும் முன்னாள் தமிழக டிஜிபியாக இருந்தவரே என்பது நினைவுகூறத்தக்கது.
இதுவரை அலெக்சாண்டர் கவனித்து வந்த உளவுப் பிரிவு டிஜிபி பொறுப்பை, அத் துறையின்ஐ.ஜியான ராமானுஜம் தற்காலிகமாக கவனித்துக் கொள்வார்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத்தைப் போலவே சங்கராச்சாரியார் விவகாரத்தில் டிஜிபி கோவிந்தின் ஒத்துழைப்பும் அரசுக்குப் பரிபூரணமாகக்கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சுங்கத்துடன் சேர்த்து கோவிந்தும் மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையே உளவுத் துறையின் தலைவராக இருந்து அதிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள வெங்கடகிருஷ்ணனைபனிஷ்மெண்ட் ஏரியாவாகக் கருதப்படும் மண்டபம் அகதிகள் முகாம் இன்சார்ஜ் ஆக தூக்கியடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்பு அலெக்ஸாண்டர் கூட இந்தப் பதவியில் தான் வைக்கப்பட்டிருந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பின்னரே அவர் மீண்டும் உளவுப்பிரிவுத் தலைவராக நியமனமானார். இப்போது மாநில டிஜிபியாகிவிட்டார்.
சங்கராச்சாரியார் விவகாரத்தைக் கையாளும் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் படிப்படியாககழற்றிவிடப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒரே நாளில் உள்துறைச் செயலாளரும், மாநில காவல்துறைத் தலைவரும் (டிஜிபி) அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டது கோட்டை வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.












Click it and Unblock the Notifications