விஜயேந்திரர் ஜாமீன் மனு தாக்கல்: 17ல் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது வரும் 17ம் தேதி விசாரைண நடைபெறுகிறது.
சங்கரராமன் கொலைவழக்கில் விஜயேந்திரர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயேந்திரர் சார்பில் மூத்தவழக்கறிஞர் லட்சுமண ரெட்டி இநத மனுவைத் தாக்கல் செய்தார்.
அதேபோல் விஜயேந்திரரின் தம்பி ரகு சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் விஜயேந்திரரின் மனு 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஞ்சி மட கணக்கு வழக்குகளைத் திருத்தியதாகக் கைது செய்ப்பட்ட வழக்கில் கணக்காளர் விஸ்வநாத அய்யரின் ஜாமீன்மனு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யரின் ஜாமீன் மனுஇன்று விசாரணைக்கு வருகிறது.